"போதை வெறி... எரிச்சலூட்டும் மஞ்சும்மல் பாய்ஸ்.." -பிரபல எழுத்தாளர் கடும் விமர்சனம்

x

சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் மலையாள திரைப்படத்தை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது இணையதளப் பக்கத்தில் படத்தை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ள ஜெயமோகன், மஞ்சும்மல் பாய்ஸ் படம் தனக்கு எரிச்சலூட்டும் வகையில் இருந்ததாகவும் படத்தில் காட்டும் மனநிலைதான் தென்னகம் முழுவதும் சுற்றுலா வரும் கேரள மக்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடிப்பதையும் கும்மாளமிடுவதையும் தொடர்ச்சியாக கேரள சினிமா காட்டி வருவதாகவும், மலையாளச் சமூகத்தையே போதைவெறியை இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள் என்றும் கடுமையாக அவர் சாடியுள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் எங்காவது சிக்கிக்கொள்வதும் நல்லதுதான் என்றும், இயற்கை அவர்களுக்கு அளிக்கும் இயல்பான தண்டனை இது என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்