"ஜெயிலரால் மகிழ்ச்சி போச்சு..வெறும் 5 நாள் தான்" - ரஜினி பரபரப்பு பேச்சு

x

ஜெயிலர் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், ரீ-ரெக்கார்டிங் முடிப்பதற்கு முன் ஜெயிலர் படம் சராசரியாக இருந்ததாகவும், ஆனால் பின்னணி இசையால் படத்தை வேறு ஒரு தளத்திற்கு அனிருத் கொண்டு சென்றுவிட்டதாக புகழாரம் சூட்டினார். தனது வெற்றிக்கும், அவரது நண்பர் நெல்சனின் வெற்றிக்காகவும் அனிருத் கடுமையாக உழைத்ததாக ரஜினி பாராட்டினார். ஜெயிலர் வெற்றியை அறிந்து 5 நாட்கள் மட்டுமே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு ஜெயிலருக்கு மேல் எப்படி வெற்றி கொடுக்கப்போகிறோம் என டென்சன் வந்துவிட்டதாக ரஜினி பேசினார். இதேபோன்ற மனநிலைதான் பாட்ஷா படத்திற்கு பிறகு ஏற்பட்டதாக ரஜினி நினைவுகூர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்