"அமீரிடம் ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்".. இயக்குநர் கரு.பழனியப்பன் வலியுறுத்தல்

x

ஞானவேல்ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பருத்திவீரன் படத்தில் 100 முரண்பாடு இருந்தாலும், பொதுவெளியில் ஒரு இயக்குநரை திருடன் என்று எப்படி கூறலாம் என சாடியுள்ளார். ஞானவேல் ராஜாவின் பின்னால் சிவக்குமாரும், அவரது மகன்களும் இருப்பார்களோ என சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ள கரு.பழனியப்பன், மகனுக்கு மிகப்பெரிய வெற்றி படம் தந்த இயக்குநர் அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது 18 ஆண்டுகால மன உளைச்சலும், திருட்டு பட்டமும்தானா என கேள்வி எழுப்பியுள்ளார். வள்ளுவன் வாக்கு பொய்க்காது எனக்கூறும் சிவக்குமார், இயக்குநர் அமீரிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்குமாறு ஞானவேல்ராஜாவை வலியுறுத்துவார் என நம்புவதாக கரு.பழனியப்பன் அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்