"அட்டகத்தில கூட அவர் படம் வேணாம்னு சொல்லிட்டாங்க" - பா.ரஞ்சித்

x

மேற்கு மாவட்டங்களில் அம்பேத்கர் சிலை கூட அதிகமாக இல்லை என இயக்குநர் பா.ரஞ்சித் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கோவையில் "பாபாசாகேப் டாக்டர். அம்பேத்கரை அறிவோம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய இயக்குநர் பா.ரஞ்சித்,

நான் ஒரு அம்பேத்கரிஸ்ட். இது எனது அடையாளம். இதை சொல்வதில் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை என்றார். பெரியாரை நாங்கள் எந்த விதத்திலும் எதிரியாக பார்க்கவில்லை என்றும் சாதிக்கு எதிராக தொடர்ந்து போராடுபவர்கள் தலித்துகள் தான் எனவும் பா.ரஞ்சித் பேசினார். மேற்கு மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை பெரும்பாலும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது என அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்