போலீஸ் கமிஷனரிடம் இயக்குனர் பாலா பரபரப்பு புகார்

x

போலி சமூகவலைதள பக்கம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் பாலா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது பெயரில் ட்விட்டர் பக்கம் மட்டுமே இருப்பதாகவும், ஆனால், போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை சில மர்ம நபர்கள் உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதை பயன்படுத்தி நடிகைகளுக்கு தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இயக்குநர் பாலா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்