சென்னை பிரஸ் மீட்... நடிகை ராஷ்மிகா ஓப்பன் டாக்

x

தானாக கதைகளை தேடிப்போவதில்லை என்றும், வரும் கதைகளை கேட்டு, பிடிக்கும் கதைகளில் நடிப்பதாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள அனிமல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் நடித்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்தப்படத்தில் தான் என்று கூறினார். மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகிற்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்றும் அவர் கூறினார். அனிமல் திரைப்படம் வரும் 1ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்