விஷாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..! வெளியான பரபரப்பு `X ' பதிவு

x

மும்பை சென்சார் போர்டு மீது அளித்த லஞ்ச புகார் குறித்து நடிகர் விஷாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் சென்சார் செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ஆறரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார் அளித்தார். இந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் நேரில் ஆஜராகினர். ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், குரல் பரிசோதனை அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றதாக குறிப்பிட்ட விஷால், வாழ்நாளில் இதுபோன்ற அலுவலகத்திற்கு எல்லாம் செல்வேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை என X தளத்தில் பதிவிட்டார். சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும், ஊழலுக்கு எதிராக போராட உள்ளதாக விஷால் சூளுரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்