ஆருத்ரா விவகாரம்... ஆர்.கே.சுரேஷ் வைத்த கோரிக்கை - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ், விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதை திரும்பப் பெற கோரி, ஆர்.கே. சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆரூத்ரா மோசாடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும், மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்.கே. சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்