“மிகப்பெரிய அச்சுறுத்தல்“ அன்றே எச்சரித்த பிரதமர் மோடி - மீண்டும் வெளியான ஷாக் வீடியோ

x

நடிகை ஆலியா பட்டின் DEEP FAKE போலி வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு வழியாக DEEP FAKE தொழில்நுட்பம் மூலம் பிரபல நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோல் உள்ளிட்டோர் முகத்துடன் பரவிய போலி வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தல் என பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், 36 மணி நேரத்தில் டீஃப் பேக் வீடியோவை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் இளம் பெண் ஒருவர் இணையத்தில் பகிர்ந்த கவர்ச்சி வீடியோவை, DEEP FAKE மூலம் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் முகத்தை மாற்றி உருவான போலி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்