திருமணமான ஒரே வருடத்தில் பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம் - நடிகை போட்ட உருக்கமான பதிவு

x

திருமணமான ஒரே வருடத்தில் பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம் - நடிகை போட்ட உருக்கமான பதிவு

சின்னத்திரை நடிகை ஸ்ருதிக்கும், அரவிந்த் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. உடற்பயிற்சி நிலையத்தை நடத்தி வந்த அரவிந்த், 2022ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றார். திருமணம் ஆனது முதல் அரவிந்த்தும், ஸ்ருதியும் சமூகவலைதளங்களில், ஆக்டிவ் ஆக இருந்து வந்தனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரவிந்த்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய மறைவு சின்னத்திரை வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கணவனை இழந்து தவிக்கும் ஸ்ருதி சண்முகபிரியாவுக்கு, அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்