சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பல நாட்களாக நடந்த ஆர்டிஓ விசாரணை நிறைவு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆர்டிஓ நடத்திய விசாரணை அறிக்கை இன்னும் சில தினங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பல நாட்களாக நடந்த ஆர்டிஓ விசாரணை நிறைவு
x
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஆர்டிஓ விசாரணை கடந்த சில நாட்களுக்கும் மேலாக நடந்து வந்தது. ஹேம்நாத் தரப்பு, சித்ராவின் குடும்பம், அவரின் தோழிகள், ஓட்டல் ஊழியர் உள்ளிட்டோரிடம் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார். விசாரணை இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை அறிக்கையானது ஓரிரு நாட்களில் காவல்துறை வசம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்