பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

பிரசாத் ஸ்டூடியோ தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவதாக இசை அமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு
x
பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதி தயார் என தெரிவித்தது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவதாக இசை அமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் உத்தரவாத மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனது பொருட்களை மட்டும் எடுத்து கொள்ளகிறேன், என்றும் பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இடத்திற்க்கு உரிமை கோரமாட்டேன் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





Next Story

மேலும் செய்திகள்