பாடகி சின்மயி நீக்கத்துக்கு இடைக்கால தடை - சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பின்னணி பாடகி சின்மயி நீக்கப்பட்தற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடகி சின்மயி நீக்கத்துக்கு இடைக்கால தடை - சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
x
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பின்னணி பாடகி சின்மயி நீக்கப்பட்தற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. 2006ம் ஆண்டிலேயே நுழைவு கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணங்களை செலுத்தி விட்டதாகவும், 2018 ம் ஆண்டு உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் கூறி, சின்மயி தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், தன் விளக்கத்தைக் கேட்காமல் சங்கத்தில் இருந்து நீக்கியதாகவும் சின்மயி தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி,  மார்ச் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்