"நடிகை பானுப்பிரியா மகளை சித்திரவதை செய்கிறார்" - மீட்டுத்தர கோரி ஆந்திர போலீசாரிடம் பெற்றோர் புகார்

வீட்டு வேலைக்கார பெண்ணை நடிகை பானுப்பிரியா சித்திரவதை செய்வதாக ஆந்திர போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
x
நடிகை பானுப்பிரியா வீட்டு வேலை செய்வதற்காக, ஆந்திர மாநிலம், பான்றவாடாவை  சேர்ந்த பிரபாவதியின் மகளை, அழைத்து சென்றுள்ளார். ஆரம்பத்தில் பெற்றோருடன் பேசுவதற்கு அனுமதித்த பானுப்பிரியா பின்னர், பேசுவதற்கு அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை, சொந்த ஊருக்கு அனுப்பவும் மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மூலமாக சமலகோட்டா காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.  அதில் தமது மகளுக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்