"காலா பட வில்லன் நானா படேகர், என்னிடம் அத்துமீறினார்" - நடிகை தனுஸ்ரீ தத்தா

'காலா' படத்தின் வில்லன் நடிகர் நானா படேகர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்துள்ளார்.
காலா பட வில்லன் நானா படேகர், என்னிடம் அத்துமீறினார் - நடிகை தனுஸ்ரீ தத்தா
x
* இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்படும் நானா படேகர்,  ரஜினி நடிப்பில் வெளியான 'காலா' திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' என்ற படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தாவும்,  நானா படேகரும் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். 

* இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை தனுஸ்ரீ, தன்னுடன் நானா படேகர் நடிக்கும்போது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். நானா படேகரின் பாலியல் சீண்டல்கள் குறித்து வெளியே கூறிய தன்னை, அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் தனுஸ்ரீ தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள், நானா படேகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தனுஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்