பட்டப்பகலில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நடிகர்

வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை
பட்டப்பகலில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நடிகர்
x
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இன்று பட்டப்பகலில் சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அப்போது காரின் உள்ளே இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  மேலும் மனோஜின் ஆவணங்களையும் பறிமுதல் செய்ததுடன், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்