திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது மேலும் ஒரு வழக்கு

தமிழக அரசை மி்ரட்டும் வகையில் பேசியதாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது மேலும் ஒரு வழக்கு
x
கடந்த 11ஆம் தேதி  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்சலைட், மாவோயிஸ்ட் போன்ற  இயக்கங்கள் உருவாகும் சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கிவிட வேண்டாம் என்றார். 

இதனைத் தொடந்து தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி  இந்து மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர்  நாராயணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 12ஆம் தேதி புகார் செய்திருந்தார். 

அதன்பேரில், கலகத்தை விளைவிக்கும் நோக்கத்தோடு் செயல்படுதல், பொது அமைதியை கெடுக்கும் வகையில் பேசுதல் ஆகிய 2 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார், பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய விவகாரத்தில் பாரதிராஜா மீது  வடபழனி காவல்நிலையத்தில் ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்