மன்னிப்பு கேட்டார் பிரியங்கா சோப்ரா

மன்னிப்பு கேட்டார் பிரியங்கா சோப்ரா
மன்னிப்பு கேட்டார் பிரியங்கா சோப்ரா
x
நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் ஒளிபரப்பான டி.வி. தொடரில், இந்தியரை தீவிரவாதிபோல் சித்தரித்து காட்சி வைத்து இருந்தனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தொடரை ஒளிபரப்பிய டி.வி. நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இப்போது பிரியங்கா சோப்ராவும் மன்னிப்பு கேட்டுள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில், "குவான்டிகோ தொடரால் சிலரது மனது புண்பட்டுள்ளதை அறிந்து வருத்தமடைந்தேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது தமது எண்ணம் இல்லை. தாம், இந்தியன் என்பதை பெருமையாக நினைப்பதாகவும், அதில் எப்போதும் மாற்றம் இல்லை என்றும் அவர், பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்