மர்ம நபர்களுடன் மது அருந்த சென்ற நபர் - கடைசியில் நேர்ந்த சோகம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் அருகேயுள்ள குனிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். கொலை, கொலை முயற்சி என 6 வழக்குகள் இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கட்டப் பஞ்சாயத்தும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மர்மநபர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த சதீஷ், அப்போது ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குனிக்கல் கிராமத்தில் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்