திருடிய லாக்கரை திறக்க முடியவில்லை - குப்பையில் வீசிய கொள்ளையர்கள்- இன்னும் பயிற்சி வேண்டுமோ ..!

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட லாக்கரை உடைக்க முடியாத விரக்தியில், குப்பை தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
x

மதுரை ஜவஹர்புரம் பகுதியில் வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான அடகு கடை ஒன்று இயங்கி வருகிறது. இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, லாக்கர் திருடு போய்யுள்ளது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் வைத்தியநாதன், புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், லாக்கர், அடகு கடையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. லாக்கரை உடைக்க முடியாத விரக்தியில், கொள்ளையர்கள் அதனை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரிய வந்தது. லாக்கரில் அரை கிலோ தங்க நகை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்