நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவர்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகில் திருச்செந்தூருக்கு கிழக்கே கடலில் மீன்பிடித்துள்ளனர். அப்போது, பழுது ஏற்பட்டு விசைப்படகு கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து உயிருக்குப் போராடிய மீனவர்களை, தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றொரு படகு மூலம் மீட்டனர். மேலும், பழுதான படகை கயிற்றில் கட்டி கரைக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்