கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய தூய்மை பணியாளர் உயிரிழப்பு..! | Karaikudi

காரைக்குடியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சேவகப் பெருமாள். 45 வயதான இவர், தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரவி என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மூடியை திறந்தபோது விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com