மார்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தண்ணீர் குட்டையில் மூழ்கி இருந்த பழனிச்சாமியின் வாயில் ரத்த காயம் இருந்தது குறித்தும், கண் மற்றும் நாக்கு பிதுங்கி இருந்தது குறித்தும் அறிக்கையில் முழுமையான விளக்கம் இல்லை எனக் கூறிய அவர்கள், இது தொடர்பாக நாளை முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.