பூண்டி மாதா ஆலயத்தில் அன்னை பிறப்பு பெருவிழா தொடக்கம்

x

பூண்டி மாதா ஆலயத்தில் அன்னை பிறப்பு பெருவிழா தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில், அன்னை பிறப்பு பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஆலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்