``எங்கள ஏன் பிரிச்சு பாக்குறீங்க..'' - சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி சொன்ன தகவல்
எண்ணூரில் நடைபெற்ற திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சென்னை எண்ணூரில் வாழ்வாதாரம் இன்றி தவித்த திருநங்கைகளுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக உணவு வண்டி, மலிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருநங்கைளை புறக்கணிக்காமல் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story