பெரியார் சிலை அவமதிப்பு - நாதக நிர்வாகி சிறையில் அடைப்பு
சென்னை ஜாபர்கான் பேட்டை, கங்கை அம்மன் சாலை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு அருகில் சாமி கும்பிடுவது போல் வந்த நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை குருதி கொடை பாசறை தொகுதி செயலாளர் அஜய், திடீரென காலணியை கொண்டு சிலையை தாக்கியுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்ததோடு 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story