உறுதி அளித்த அமைச்சர் சிவசங்கர்

x

வாகன எப்.சி கட்டண உயர்வை கண்டித்து டிசம்பர் 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள லாரி உரிமையாளர்கள் சங்கம், அதனை வாபஸ் பெற வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்.சி கட்டண உயர்வு குறித்து முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராடும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்