ஆசிரியரிடம் இருந்து தப்பிக்க கடத்தல் நாடகம் நடத்தி போலீசாரை அலறவிட்ட சிறுவன்

x

காரைக்காலில், கடத்தல் நாடகம் நடத்தி, 4 மாவட்ட போலீசாரை அலறவிட்ட 13 வயது பள்ளி மாணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரைக்காலை சேர்ந்த சகோதரர்கள் இருவர் பள்ளியில் பயின்று வருகின்றனர். வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரச் சொன்னதால், சகோதரர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் நடுவழியில், நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். அண்ணனை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றதாக, அவனது தம்பி பள்ளியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் 4 மாவட்ட எல்லையில், அங்கும் இங்குமாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கற்களாச்சேரி ஆத்துப்பாலம் அருகே நின்றிருந்த மாணவனை மீட்ட போலீசார், கடத்தல் சம்பவம் குறித்து விசாரித்தபோது, சிறுவன் தத்ரூபமாக நடித்துக் காட்டினான்.


Next Story

மேலும் செய்திகள்