"சிலருக்கு ஃபேஷன் ஆகிவிட்டது" - பிரதமர் மோடி கடும் விமர்சனம்
சாதியைப் பற்றி பேசுவது தற்போது சிலருக்கு ஃபேஷன் ஆகிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை வழங்கினார். அப்போது, பட்டியலின மற்றும் ஓ.பி.சி சமூகத்தினருக்கு அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்க தங்கள் அரசு பணியாற்றியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். அரசியலமைப்பின் மீதான அர்ப்பணிப்பு, மக்கள் சார்பான முடிவுகளை எடுக்க தங்களைத் தூண்டுகிறது என்றும், தேசத்தின் ஒற்றுமையே தங்களுக்கு முதன்மையானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Next Story