திடீரென இரவில் சைக்கிளில் பறந்த மேயர் பிரியா... பரபரப்பான சென்னை சாலை - விஷயமே வேறயாம்..!

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்பதை வலியுறுத்தி நடந்த சைக்கிள் பேரணியில், சென்னை மேயர் பிரியா சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
x

சிங்காரச் சென்னை 2.0 விழாவின் ஒரு பகுதியாக பெண்களுக்கு பாதுகாப்பான சென்னை என்பதை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே சைக்கிள் பேரணியை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப்சிங்பேடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறிது தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்று மேயர் பிரியா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் உட்பட ஏராளமான பெண்கள் சைக்கிள் ஓட்டி பேரணியில் பங்கேற்றனர். இதேபோல, எல்ஐசி மெட்ரோ நேரு பூங்கா, மெட்ரோ நிலையம், அரும்பாக்கம், பாண்டிபஜார், கலங்கரை விளக்கம் என ஆறு இடங்களில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்