பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை - மர்ம நபருக்கு போலீஸ் வலை

x

திருநெல்வேலி மாவட்டம் குறிச்சிகுளம் கிராமத்தில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி - மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வெள்ளியப்பன் என்பவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள், அரிவாளால் தலை துண்டித்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தாழையூத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்