"உன்னால் என் தம்பி கெட்டுப் போகிறான்"-கண்முன்னே பற்றி எரிந்த நண்பனின் பைக்-அண்ணன் செய்த வெறிச்செயல்

x

கன்னியாகுமரியில், தம்பியை மதுபோதைக்கு அடிமையாக்குவதாகக் கூறி, அவரது நண்பரின் இருசக்கர வாகனத்தை எரித்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

செறுகோல் பகுதியை சேர்ந்த சகோதர்களான வேணுகோபால் மற்றும் பிபின் ஆகிய இருவரும் மதுவுக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது.

இதனிடையே, தம்பி பிபின் தனது நண்பரான மகேஷ் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

பின்னர், பிபினை அவரது வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் மகேஷ் அழைத்துச் சென்று விட்டுள்ளர்.

அப்போது வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த வேணுகோபால், தம்பியை மதுவுக்கு அடிமையாக்குகிறாயே என கேட்டு, மகேஷின் வாகனத்திற்கு தீவைத்துள்ளார்.

இதில் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்