அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற தம்பி | பதறவைக்கும் CCTV காட்சிகள்

x

ஈரோடு மொசுவண்ண வீதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை எதிரே உள்ள ஓட்டலில் அருண் பாண்டியன் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மதுரை மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர்.

ஓட்டலில் வேலை பார்த்து வந்த அவர், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கடும் வெட்டுக் காயங்களோடு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது..

இதன்பேரில் ஈரோடு மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருண் பாண்டியனின் சடலத்தை மீட்டனர்... அதிகாலையில் கொடூரமாக நடந்த இந்த கொலைக்கு காரணம் என்ன? என போலீசார் தேடி வந்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றினர்..

அப்போது அருண் பாண்டியனை ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற காட்சிகள் பார்ப்போரை பதற வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்