"லக்கேஜிற்கு டிக்கெட் எடுக்க மாட்டேன்" - ஓடும் பேருந்தில் அடம்பிடித்த நபர் - விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி

x

கோவையில் பேருந்து ஒன்றில் லக்கேஜிற்கு டிக்கெட் எடுக்க மாட்டேன் அடம்பிடித்த நபரிடமிருந்து 80 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர், கோவை காந்திபுரம் பகுதியில் பேருந்தில் ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது குமார், உடன் வைத்திருந்த லக்கேஜ் பேக்கிற்கு டிக்கெட் எடுக்க கோரிய நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த நடத்துனர், பேருந்தை காட்டூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்று புகார் அளித்தார். அங்கு குமாரை சோதனை செய்ததில், பையில் 80 லட்ச ரூபாய் பணம் ஆவணமின்றி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குமாரை கைது செய்த போலீசார், இது ஹவாலா பணமா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்