மூதாட்டிகளை குறி வைத்து நூதன மோசடி -பண மோசடியில் ஈடுபட்ட பெண் கும்பல்

x

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே, இரண்டு மடங்கு பணம் தருவதாகக் கூறி, மூதாட்டிகளிடம் பணம் பெற்று நூதன மோசடியில் ஈடுபட்ட 4 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருத்தாச்சலம் டி.வி. புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், 70 மாதங்களுக்கு பணம் கட்டினால், 2 மடங்காக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி, கூலை வேலைக்கு சென்ற மூதாட்டிகள் 40 பேர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், மாதந்தோறும் 100 முதல் 500 ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர். 70 மாதங்ளைக் கடந்து விட்ட நிலையில், அந்தப் பெண்கள் கூறிய படி பணம் திருப்பி தரப்படவில்லை. வட்டி வேண்டாம், கட்டிய பணத்தையாவது கொடுங்கள் என மூதாட்டிகள் கேட்டபோது, பணம் பெற்ற நிறுவனம் ஏமாற்றி விட்டுச் சென்றதாக அப்பெண்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூதாட்டிகள், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இதுதொடர்பாக மனு அளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்