பைக்கில் சென்ற தம்பதியை காரில் இடித்து தள்ளிய பெண் - குடிபோதையில் ரகளை செய்ததால் பரபரப்பு

x

கேரள மாநிலம் கண்ணூரில், கார் மோதியதில் டூவீலரில் சென்ற தம்பதிகள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது ரசிதா என்ற இளம்பெண் என்பதும், அவர் மதுபோதையில் காரை ஓட்டியதும் தெரியவந்தது.

காரிலிருந்து இறங்காமல் அடிம்பிடித்த அந்த பெண், மதுபோதையில் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரசினாவை போராடி கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், இளம்பெண் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்