கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கணவனை கொன்ற மனைவி - கோவையில் பயங்கரம்

x

கோவை போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்தவர் ரங்கன். இவரின் மனைவி கோகிலா. இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார். குடிபோதைக்கு அடிமையான ரங்கனால் தினமும் வீட்டில் சண்டை, சச்சரவாக இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று குடிபோதையில் வந்த ரங்கன், தன் மனைவியிடம் தகராறில் ஈடுபடவே, கோபமடைந்த கோகிலா, தன் கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டார். இதில் படுகாயமடைந்த ரங்கன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதன்பேரில் கொலை செய்த கோகிலாவை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்