சொன்ன பேச்சை கேட்காத கணவர்.. "விஷ ஊசி போட்ட கோபக்கார மனைவி"

x

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவான மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

குன்னத்தூர் அருகே உள்ள தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை விற்குமாறு அவரது மனைவி தேவி வற்புறுத்தியதாகவும் அதற்கு சுப்பிரமணி மறுப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவருக்கு தேவி ஊசி செலுத்தியதாகவும் , சற்று நேரத்தில் மயக்கமடைந்த சுப்பிரமணியை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் தெரிகிறது.

சுய நினைவை இழந்த சுப்பிரமணியின் ரத்தத்தில் பூச்சி மருந்து கலந்துள்ளதாக கூறிய மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்த நிலையில் அவருக்கு சுய நினைவு திரும்பியது.

இந்நிலையில் சுப்பிரமணியின் மனைவி தேவி தலைமறைவானதால் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தேவி கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயன்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்