கர்ப்பிணி பெண் இருந்தும் ஏன் அபராதம்..? -போக்குவரத்து காவல்துறை சார்பில் விளக்கம்..

x

சென்னையில், ஆட்டோ ஓட்டுநருடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக, போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அது தொடர்பான செய்திக் குறிப்பில், சென்னை பெரம்பூரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் இரவு பணியில் ஈடுபட்ட போது, 'No entry' பாதையில் வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்த நிலையில், கர்ப்பிணி ஒருவர் பயணித்ததை அறிந்து அபராதம் விதிக்காமல் ஆட்டோ செல்ல அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 'No entry' ஏன் இல்லை என பயணி ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், ரயில்வே சுரங்கப்பாதையின் தொடக்கத்தில் பலகை இருப்பதாக உதவி ஆய்வாளர் கூறியதை மேற்கோள் காட்டப்பட்டது.

இதனிடையே, போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக, போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்