பணியில் ஈடுபட்டிருந்த போது... திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து...4பேர் பரிதாப பலி | ANDRAPRADESH

x

ஆந்திராவில், தனியார் மருந்து நிறுவன ஆய்வகத்தில் நடந்த தீ விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே அனகாபள்ளி என்ற பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மருந்து நிறுவன ஆய்வத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது, ஆய்வகத்தில் திடீரென தீ தீப்பற்றியதால், பணியில் இருந்த 4 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்து, தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்