வாட்ஸ்அப் கால்.. பணத்துடன் செல்ஃபி - கேரளாவை மிரளவிட்ட சம்பவம்

x

கேரளாவில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோழிக்கோட்டில் நேற்றிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மலப்புரத்தைச் சேர்ந்த ஷகீல் ஹர்ஷத் என்பரை சோதனை செய்தபோது, 112 கிராம் எம்டிஎம்ஏ போதை பொருள், 345 எல்எஸ்டி ஸ்டாம்ப்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான 31 டியூப்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வளைகுடாவில் பாஸ் எனப்படும் நபருக்கு வாட்ஸ்அப் மூலம் போன் செய்து, பணத்துடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வந்ததாகவும், அதற்கேற்ப போதை மருந்து டெலிவரி செய்யப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்