கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சு - உரையை கேட்க தொண்டர்கள் செய்த காரியம்

x

கர்நாடக மாநிலம் மைசூரில் கொட்டும் மழையிலும் பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களின் சுதந்திரம் பறிபோய் விட்டதாக குற்றம் சாட்டினார். கர்நாடக மாநிலம் மைசூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசத் தொடங்கியதும் மழை குறுக்கிட்டது. ஆனால், கொட்டும் மழையிலும் நனைந்தபடி பேசிய ராகுல் காந்தி, கடந்த 8 ஆண்டுகளில் நாட்டு மக்களின் சுதந்திரம் பறிபோய்விட்டதாக குற்றம் சாட்டினார். மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்த‌த்திற்கு எதிரான போராட்டம் இது என்ற அவர், இந்திய ஒற்றுமைப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்