16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பின் காவலர் செய்த காரியம் - வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்

x

திருச்சி அருகே 16 வயது சிறுமியிடம் அத்துமீறி சட்டவிரோதமாக கருவைக் கலைத்த காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி தன் உறவினர் பராமரிப்பில் வளர்த்து வருகிறார். இதனிடையே சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவரவே, திருச்சி அரசு மருத்துவமனையில் போலி ஆவணங்களை வைத்து சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.giஇந்த சம்பவத்தில் கள்ளக்குடி காவல் நிலைய காவலர் பிரகாஷ் சிறுமியிடம் அத்துமீறியது உறுதியான நிலையில் அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்