"அரசு கொடுத்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தம்?" இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் அதிர்ச்சி

x

"அரசு கொடுத்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தம்?" இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் அதிர்ச்சி

திருப்பூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே தேவேந்திரன் நகரை சேர்ந்த 216 பேருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தலா ஒன்றரை சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.

அதே பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் என்பவர், அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்டுவதற்காக, தடையில்லா சான்றிதழ் கேட்டு பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.

இந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று கூறியதை அடுத்து சேவூர் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்