"விசிக, நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்" - அர்ஜூன் சம்பத் பேட்டி

x

"விசிக, நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்" - அர்ஜூன் சம்பத் பேட்டி

லண்டனில் இந்து கோயில்கள் மீதும் இந்தியர்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில், தூதரக அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் செய்திகளை சந்தித்த அவர், லண்டனில் கடந்த ஒரு வார காலமாக இந்து கோயில்களின் மீதும் இந்தியர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், கோவில்கள் மற்றும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி பிரிட்டிஷ் தூதரகத்தை கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். கனடாவிலும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அவர் கூறினார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து ஆதரவளித்து வருவதும், அவர்களுக்கு சார்பான கருத்துக்களை கூறி வரும் இரண்டு கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒன்று அல்ல, ஆர்எஸ்எஸ் அமைப்பு கட்டுக்கோப்பான அமைப்பு என தெரிவித்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்