வேறொரு பெண்ணுடன் தகாத உறவு.. மனைவியின் தங்கச்சியோடு 2ம் திருமணம்.. மனைவிக்கு செய்த துரோகத்தால் வீழ்ந்த நபர்

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் உமயலட்சுமி தம்பதிக்கு திருமணமாகி, அபிநயா என்ற மகளும், மனோஜ்குமார் என்ற மகனும் இருந்த நிலையில், கணேசனுக்கும், வேறோரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததால், உமயலட்சுமி கடந்த 4 ஆண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, உமயலட்சுமியின் சகோதரி ராதிகாவை 2வதாக திருமணம் செய்து கொண்டு கணேசன் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால், மனோஜ்குமாரை அழைத்துக் கொண்டு ராதிகா தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மணமுடைந்த கணேசன் தனது மகள் அபிநயாவிற்கு குளிர்பானத்தில் விஷத்தை கொடுத்து கொலை செய்து விட்டு, தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்