"லீவு போட்டு வந்திருக்கேன்" ரசிகர் வைத்த கோரிக்கை .... டென்ஷனில் கத்திய கோலி

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி வீரர்களுடன், புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ரசிகர்களிடம் விராட் கோலி கோபமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
x

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி வீரர்களுடன், புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ரசிகர்களிடம் விராட் கோலி கோபமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது, அங்கு திரண்ட இந்திய ரசிகர்கள் இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டியுடன், புகைப்படம் எடுக்க விரும்பி கூச்சலிட்டனர். அப்பொழுது ஓய்வு அறையில் இருந்து வெளியே வந்த விராட் கோலி, ரசிகர்களின் கூச்சலை பார்த்து விசாரித்துள்ளார். அதற்கு ஒருவர் அலுவலகத்தில் விடுமுறை எடுத்து கொண்டு வந்துள்ளதாகவும், கமலேஷ் நகர்கோட்டியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனால் கடுப்பான விராட் கோலி, நாங்கள் கிரிக்கெட் போட்டிக்கு வந்துள்ளோமா, இல்லை புகைப்படம் எடுப்பதற்கு வந்துள்ளோமா என கோபத்துடன் கேட்டார்.


Next Story

மேலும் செய்திகள்