அரசுப்பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் -ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் அடாவடி

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, அரசுப் பேருந்து நடத்துநர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலப்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அன்பழகன் என்பவர், திட்டக்குடியில் பேருந்தில் ஏறி பாலப்பட்டுக்கு பயணச்சீட்டு கேட்டுள்ளார். பேருந்து நிறுத்தம் அங்கு கிடையாது என நடத்துநர் கூறியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அன்பழகன் அவரது கிராமத்தைச் சேர்ந்த ஆதரவாளர்களை, செல்போனில் அழைத்ததுடன், பாலப்பட்டு கிராமத்தில் பேருந்தை வழிமறித்து நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்