"விக்ரம்" படத்தில் சூர்யா வந்த சீனில் நிஜமாகவே தீப்பிடித்த திரை - அலறியடித்து ஓடிய ரசிகர்கள்

புதுச்சேரியில் 'விக்ரம்' திரையிடப்பட்டிருந்த திரையரங்க திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
x

காலாப்பட்டு பகுதியில் உள்ள திரையரங்கில் விக்ரம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று இரவுக் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது, திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வேகமாக வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்