தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது - சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த போலீஸ்

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொடர் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.


படாளம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பழவெளி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து விக்னேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்